வாஷிங் மெஷினுக்குள் ஒளிந்து கொண்ட குழந்தைக்கு நிகழ்ந்த விபரீதம் – வைரலான வீடியோ..!


வாஷிங் மெஷினில் சிக்கிக் கொண்ட குழந்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

சீனாவின் செஜியாங் மாகாணத்தில் உள்ள ஷவ்ஷாங் நகரில் சிறுவர், சிறுமிகள் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது இரண்டரை வயது குழந்தை வாஷிங்மெஷினுக்குள் ஒளிந்து கொண்டது.

சிறிது நேரத்தில் மிஷினுக்குள் சிக்கிக் கொண்ட அந்தக் குழந்தையின் அழுகுரல் கேட்ட பெற்றோர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பல மணிநேர போராட்டத்திற்கு பின் வாஷிங் மெஷினை உடைத்து போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!