பளுதூக்கல் போட்டியில் இலங்கை வீரர் வெள்ளி பதக்கம் வென்றார்..!


பளுதூக்கல் போட்டியில் இலங்கைக்கு வெள்ளிப்பதக்கத்தை இந்திக திஸாநாயக்க பெற்றுக்கொடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் இடம்பெற்றுவரும் 21 ஆவது பொதுநலவாயநாடுகளின் விளையாட்டுப்போட்டியில் ஆண்களுக்கான 69 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட இந்திக திஸாநாயக்க வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்தார்.

இதைவிட இலங்கை சார்பில் இரு வெண்கலப் பதக்கங்களை இலங்கையின் தினூஷா கோமஸ் மற்றும் சத்துரங்க லக்மால் ஜயசூரிய ஆகிய இருவரும் பெற்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!