இப்படியும் ஒரு தாயா.? வெள்ளையாக்க கருங்கல்லைக் கொண்டு தேய்த்த கொடூரம்..!


குழந்தையை வெள்ளையாக்க தாய் செய்த செயலால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் நிஷத்புரா பகுதியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை சுதா திவாரி. இவர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், உத்தரகாண்டில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் இருந்து ஆண் குழந்தையை தத்தெடுத்தார்.

அப்போது குழந்தை கருப்பாக இருந்துள்ளது. இது சுதாவிற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அருகில் உள்ளவர்களிடம் குழந்தையின் நிறத்தை வெள்ளையாக்க யோசனை கேட்டுள்ளார்.

பின்னர் கருங்கல்லில் வைத்து குழந்தையை தேய்த்துள்ளார். இதில் குழந்தைக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதைக் கண்ட சுதாவின் சகோதரி மகள், குழந்தைகள் நல அமைப்பினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், குழந்தையை மீட்டனர்.

மேலும் சுதா சட்டவிதிகளுக்கு புறம்பாக குழந்தையை தத்தெடுத்ததால், அவரை கைது செய்தனர். படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறது.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!