தேர்தல் பிரசாரத்தின் போது சித்தராமையாவுக்கு நடந்த விபரீதம்..!


கர்நாடக மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் (மே) 12-ந்தேதி தேர்தல் நடக்கிறது.

கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் அவர் 4 நாட்கள் பிரசாரம் செய்தார்.

நேற்று மாவின்ஹள்ளி பகுதியில் கட்சி நிர்வாகி ஒருவர் வீட்டில் உணவு சாப்பிட பிளாஸ்டிக் நாற்காலியில் அவர் அமர்ந்தார். அப்போது அந்த பிளாஸ்டிக் நாற்காலி உடைந்தது. சித்தராமையாவும் நாற்காலியில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் பிளாஸ்டிக் நாற்காலியின் கைப்பிடி அவரது தலையில் குத்தி ரத்தக் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை பாதுகாப்பு அதிகாரிகள் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் கட்டு போடப்பட்டது. பின்னர் அவர் பெங்களூர் விரைந்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!