எகிப்து நாட்டில் அதிபர் தேர்தல் நடந்து வருகிறது. இதற்கான ஓட்டு பதிவு கடந்த திங்கட்கிழமை தொடங்கி நேற்று வரை 3 நாட்கள் பல்வேறு கட்டங்களாக நடந்தன.
இந்த தேர்தலில் அதிபர் அப்துல் சிசி மீண்டும் போட்டியிடுகிறார். முதல் 2 நாள் நடந்த தேர்தலில் ஓட்டு பதிவு மிக குறைவாக இருந்தது.
இதனால் ஓட்டு போடாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தேர்தல் துறை அறிவித்தது. ஆனாலும், ஓட்டு பதிவு அதிகமாக நடக்கவில்லை.
ஓட்டு பதிவு குறைவாக இருந்தால் தற்போதைய அதிபருக்கு தோல்வி ஏற்படலாம் என கருதினார்கள்.
எனவே, அதிபர் தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
இதே போல் எதிர்க்கட்சிகளும் பணம் கொடுத்தன. ஆனாலும் கூட ஓட்டு பதிவு தொடர்ந்து மந்தமாகவே இருந்தது. 2-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்தியாவில்தான் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அதே போல் எகிப்து நாட்டிலும் நடந்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.-Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!