மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து இளம்பெண் தற்கொலை! பின்ணனியில் நடந்தது என்ன..?


நாகர்கோவிலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவிலை அடுத்த கோட்டாரை சேர்ந்த அய்யாவு என்பவரின் மனைவி நித்யா(28). இவர் கடந்த சில நாட்களாக வயிற்று வழியால் துடித்துள்ளார்.

இதனால் நாகர்கோவிலில் உள்ள லட்சுமி மருத்துவமனையில் 2-வது மாடியில் உள்ள அறையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நள்ளிரவில் திடீரென லட்சுமி அவரது படுக்கையில் காணாததால் உறவினர்கள் மருத்துவமனையின் பல பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர்.

ஆனால் லட்சுமி கிடைக்காததால் காலையில் பார்த்துக்கொள்ளலாம் என தூங்கிவிட்டனர்.

இதனையடுத்து இன்று அதிகாலை மருத்துவமனையின் பின்புறம் உள்ள வீட்டின் பூந்தொட்டியில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் லட்சுமியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதில் லட்சுமிக்கு அய்யாவு இரண்டாவது கணவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் லட்சுமி 5-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.-Source: lankasee

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!