அம்பானி மகன் யாரை காதலிக்கிறார் என தெரியுமா..?


ரிலையன்ஸ் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக விளங்குகிறார். இவரது மனைவி நீதா அம்பானி.

இவர்களுக்கு 2 மகன்கள். மூத்த மகன் ஆகாஷ் அம்பானி. இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர்களில் 25 வயதாகும் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.

மணமகள் பெயர் ஸ்லோகா மேத்தா. அவர் மும்பையைச் சேர்ந்த பெரும் கோடீஸ்வரரும் வைர வியாபாரியுமான ரூஸ்செல் மேத்தாவின் மகள் ஆவார். இவர் “ரோஷி புளு டயமண்ட்ஸ்” என்ற பெயரில் வைர வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். இது உலகின் மிகப்பெரிய வைர நிறுவனம் ஆகும்.

இருவரது குடும்பமும் நெருக்கமாக இருந்து வந்தது. ஆகாஷ் அம்பானியும், ஸ்லோகா மேத்தாவும் மும்பையில் உள்ள திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் ஒன்றாக படித்து வந்தனர். அப்போது இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். அது காதலாக மாறியது.


இந்த நிலையில் ஸ்லோகா மேத்தா லண்டன் பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் பொருளாதார கல்லூரியில் படித்தார். தனது தந்தை நடத்தும் நிறுவனத்தில் இயக்குனராக உள்ளார். பல்வேறு சமூக சேவை அமைப்புகளை நடத்தி வருகிறார்.

ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனங்களின் இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்கிறார்கள். 2 நாட்களுக்கு முன் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கோவாவில் கோலாகலமாக நடந்தது. இதில் இருவரது குடும்பத்தினரும் நெருங்கிய உறவினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் ஆகாஷ் அம்பானி- ஸ்லோகா மேத்தா திருமணம் மும்பையில் கோலாகலமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். நாட்டின் மிகப்பெரிய பணக்கார குடும்பத்தின் திருமணம் என்பதால் ஆடம்பரத்துக்கும், கோலாகலத்துக்கும் பஞ்சம் இருக்காது.

இந்த திருமணம் பற்றி முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியிடம் கேட்டபோது அவர் உறுதி செய்தார். அவர் கூறும்போது, “ஸ்லோகாவை 4 வயதாக இருக்கும்போதே எனக்கு தெரியும். அவள் எங்கள் வீட்டுக்கு வருவதை மனப்பூர்வமாக வரவேற்கிறேன்” என்றார்.

திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததைத் தொடர்ந்து இருவரது குடும்பத்தினரும் நேற்று மும்பையில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!