ஒரே வாரத்தில் பிரசவ தழும்புகளை மறையச் செய்ய இந்த இயற்கை பொருட்கள் போதும்..!


பிரசவம் என்பது ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் ஒரு உன்னதமான விடயம்.

இந்த பிரசவ காலத்தின் போது தாயின் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதில் முக்கியமான ஒன்று தான் இந்த ஹோர்மோன் மாற்றம்.

இந்த ஹோர்மோன்களின் மாற்றத்தால் எடையும் அதிகரிக்கின்றது. ஒரு புறம் வயிற்றில் இருக்கும் குழந்தையும் படிப்படியாக வளர்ச்சியடைவதால் வயிற்றில் உள்ள தசையும் விரிவடைந்து தழும்புகள் ஏற்படும்.

திடீரென எடை அதிகரித்தல் மற்றும் தாயின் வயிறு சிறிது சிறிதாக விரிவடைதல் போன்ற காரணத்தால் தோன்றும் இந்த தழும்புகள் பார்ப்பதற்கு அசிங்கமாகத் தோன்றும்.

இதனால், கடைகளில் விற்கப்படும் பல்வேறு வகையான க்ரீம்களைக் கொண்டு அதனை போக்க முற்படுவர்.

ஆனால் வீட்டில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே இந்த தழும்புகளை அகற்ற முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அது தொடர்பில் இப்போது விரிவாகப் பார்ப்போம்.


01. எலுமிச்சை சாறு

துண்டுகளாக வெட்டப்பட்ட எலுமிச்சையை சுருக்கமுள்ள பகுதியில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

இதை தொடர்ந்து செய்து வர, சில நாட்களில் சுருக்கங்கள் மறைந்து தோல் பொலிவாக மாறும்.


02. கற்றாழை

தோலில் சுருக்கங்கள் உள்ள பகுதியில், கற்றாழைச் சோற்றை 15 நிமிடங்கள் தேய்த்தால் தோல் புத்துணர்ச்சி பெரும். சுருக்கங்களும் மறையும்.


03. ஒலிவ் எண்ணெய்

ஒலிவ் எண்ணெயை சூடேற்றி தொடர்ந்து தழும்பு உள்ள இடத்தில் 20 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். இதில் அன்டி ஒக்ஸிடென்ட் அதிகமுள்ளதால், தோல் மிணுமிணுக்கும். தழும்புகள் மற்றும் சுருக்கங்கள் இருந்த இடமே தெரியாது.


04. உருளை கிழங்கு ஜூஸ்

பாதிப்புக்குள்ளான செல்களை சரிசெய்யக்கூடிய சத்துக்கள் உருளை கிழங்கில் உள்ளது. துண்டாக வெட்டிய உருளை கிழங்கை தினமும் 10 நிமிடம் தழும்புகளில் தேய்த்துவர தழும்புகள் மறையும். அல்லது, உருளை கிழங்கை வேக வைத்து அதையும் தேய்கலாம். பின்னர், வெந்நீரில் கழுவ வேண்டும்.


05. சர்க்கரை
சர்க்கரையை, பாதாம் எண்ணெயோடு கலந்து சுருக்கங்கள் உள்ள பகுதியில் மெதுவாக தேய்க்கவும். 10 நாட்களில் சுருக்கங்கள் மறையும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!