சிகப்பழகை பெற துடிக்கும் பெண்கள் பேரிச்சையை இப்படி பயன்படுத்துங்க..!


முகம் கருமையடைந்து விட்டாலே பெண்கள் வீட்டை விட்டு செல்ல தயங்குவார்கள். அதுமட்டுமின்றி கடையில் விற்கப்படும் வைட்னிங் கிரீம் மற்றும் பேஷpயல் என அனைத்தையும் முயன்று பார்ப்பார்கள்.

ஆனால் எமது வீட்டில் உள்ள பேரீச்சம்பழத்தை வைத்தே முகத்தில் உள்ள கருமையை அகற்ற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

அது சரி, பேரிச்சையை வைத்து எப்படி சிகப்பழகு பெறுவது?


தேவையான பொருட்கள்:

01. விதை நீக்கிய பேரீச்சம்பழம் – 01

02. உலர்ந்த திராட்சைபழம் – 10

03. பப்பாளி – சிறு துண்டு


செய்முறை:

பேரீச்சம்பழம் ஒன்றை எடுத்து அதிலுள்ள விதையை அகற்றிக் கொள்ளுங்கள். பின்னர் பப்பாளித் துண்டைநன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் பேரீச்சம்பழம் மற்றும் உலர் திராட்சையை ஒருநாள் முழுவதும் வெந்நீரில் ஊறவைத்து பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த கலவையுடன் அரை தேக்கரண்டி அரைத்த பப்பாளியை கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் இதை முகத்திற்கு பேஸ்பேக் போல போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள்.

வீட்டிலேயே தயாரித்துக் கொள்ளக் கூடியஇந்த எளிய பேஷயலின் மூலம் சிகப்பழகைப் பெற்றிடுங்கள். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!