செலவே இல்லாமல் 15 நாட்களில் வெள்ளையாக வர ஆசையா..? பாதாமை இப்படி யூஸ் பண்ணுங்க..!


இளம்பெண்கள் மட்டுமல்ல ஆண்கள் பெண்கள் என அனைவரும் தங்களை வெள்ளையாகக் காட்டிக் கொள்ளவே விரும்புகின்றனர்.

அதற்காக விலை கூடிய க்ரீம்களைப் பயன்படுத்துவதோடு அழகு நிலையங்களுக்குச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.

செலவே இல்லாமல் வீட்டிலிருந்தே உங்கள் தோலை வெண்மையாக்க முடியும். ஆம், பின்வருவனவற்றை செய்தால் உங்கள் சருமம் நன்கு வெண்மையாவதை நீங்களே அவதானிப்பீர்கள்!


முறை 01
02 தேக்கரண்டி அரிசி மாவில், சிறிது குளிர்ந்த டீடிகாசனை சேர்த்து, அரைத் தேக்கரண்டி தேன் கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை ஃபேஸ்பேக் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.


முறை 02
தினமும் கடலைமாவு தேய்த்து குளிப்பதன் மூலமும், கடலை மாவை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவுவதன் மூலமும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க முடியும். இந்த முறையை தினமும் பின்பற்றி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

முறை 03
எண்ணெய் பசையுடைய சருமம் உள்ளவர்கள், சிறிது கடலை மாவுடன் மஞ்சள்தூள், எலுமிச்சைசாறு மற்றும் பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3 முறை செய்து வர, நல்ல மாற்றத்தைக் காணலாம்.


முறை 04
பாதாம் சிறிதளவை காலையிலேயே நீரில் ஊற வைத்து, இரவில் அதன் தோலை நீக்கி விட்டு, 2 தேக்கரண்டி பால் சேர்த்து பேஸ்ட் செய்து, படுக்கும் முன் முகத்தில் தடவி, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் சரும நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணமுடியும். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!