பிரபல நடிகை ரம்பாவுக்கு மீண்டும் இப்படி ஒரு ஆசையா..?


நடிகர் கார்த்திக்குடன், ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் பாவாடையை காற்றில் பறக்கவிட்டு நடனம் ஆடி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ரம்பா. 90களில் தொடங்கி முன்னணி ஹீரோக்களுடன் நடித்த ரம்பா திடீரென்று கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை மணந்து இல்லறத்தில் செட்டிலானார். இவர்களுக்கு லாவண்யா, சாஷா என இரண்டு மகள்கள் பிறந்தனர்.

இந்நிலையில் கணவருடன் மனஸ்தாபம் ஏற்பட்டதையடுத்து விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு செய்தார். பின்னர் கணவருடன் சமரசம் செய்துகொண்டார் விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றார். கடந்த 2010ம் ஆண்டு பெண்சிங்கம் படத்தில் ரம்பா கடைசியாக நடித்திருந்தார். அதன்பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். திருமணத்துக்கு பிறகு மீனா, ஜோதிகா உள்ளிட்ட நடிகைகள் மீண்டும் நடிக்க வந்துள்ளனர்.

அதைப் பார்த்து ரம்பாவுக்கும் நடிப்பு ஆசை மீண்டும் தொற்றிக்கொண்டது. சினிமாவில் ரீ என்ட்ரி ஆவதற்கு முடிவு செய்ததையடுத்து தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். தமிழில் வாய்ப்புக்கு வலை வீசியவருக்கு தெலுங்கில் ஒரு படம் கைகூடியிருக்கிறது. தெலுங்கு காமெடி நடிகர் சப்தகிரி நடிக்கும் புதிய படத்தில் நகைச்சுவை நாயகியாக நடிக்கிறார் ரம்பா.-
Source: dinakaran

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!