மனைவி நடத்தையில் சந்தேகம்… மகளுக்கு கத்திக் குத்து… நடந்தது என்ன?


பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரத்தை சேர்ந்தவர் சஞ்சய் குமார் இவரது மனைவி ஷோபா சர்மா. இவர்களுக்கு காஜல்,கிரண்,மற்றும் ஆஷிமா என்ற மூன்று மகள்கள் உள்ளனர். இவர்களில் ஆஷிமா மட்டும் பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

குடிபழக்கம் கொண்ட சஞ்சய்குமார் தினமும் குடித்துவிட்டு வந்த ஷோபாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் தகராறு செய்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே சண்டை ஏற்பட்ட போது சஞ்சய்குமார் ஆத்திரத்தில் இரண்டு கத்தியை கொண்டு உடல் முழுவதும் குத்தியுள்ளார்.

இதனை தடுக்க வந்த ஆஷிமா என்ற மகளையும் குத்தியுள்ளார். வலி தாங்க முடியாமல் ஷோபா கத்தியதால் அக்கம் பக்கத்தினர் வந்து மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது மருத்துவர்கள் பரிசோதித்த போது அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சம்பவம் தொடர்பாக சஞ்சய் குமார் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!