கர்ப்பிணிகள் பன்னீரை உட் கொள்வதால் இவ்வளவு நன்மையா..?


கருவுற்றுள்ள தாய்மார்கள் தங்களது கர்ப்ப காலத்தில் சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும் என்பது நாமறிந்ததே. கர்ப்ப காலத்தில் தாய் மற்றும் சேயின் வளர்ச்சிக்கு போதுமான கல்சியம்உட் கொள்ளப்படவேண்டும்.

சில சமயங்களில் கருவுற்றுள்ள தாய்மாருக்கு உணவு உட் கொள்ள வேண்டும் என்ற தேவை இருந்தாலும் உணவை உட் கொள்ள முடியாத சூழ்நிலை காணப்படும் இது சாதாரண விடயம் தான். இருப்பினும் இயன்ற வேளைகளில் போதுமான அளவு உணவை உட் கொள்ளவேண்டும்.


குறிப்பாக கல்சியம் அதிகளவில் உள்ள பொருட்களை உட் கொள்ளவேண்டும். அந்த வகையில் பன்னீர் ஒரு சிறந்த உணவாக கருதப்படுகின்றது. பன்னீரில் நிறைந்துள்ள கல்சியம் தாய்க்கு மட்டுமல்லாது குழந்தைக்கும் தேவையான கல்சியத்தை வழங்குகிறது.

இந்த பன்னீரை கர்பிணித் தாய்மார்கள் உட் கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது எனப் பார்ப்போம்.

01. குழந்தையின் எலும்பு மற்றும் பல் வளர்ச்சிக்கு உதவுகின்றது
பன்னீரில் உள்ள கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் என்பன குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் பல் வளர்ச்சிக்கும் அத்தியாவசியமானது.

இதனால் குழந்தைக்கு தேவையான கல்சியம் மற்றும் பொஸ்பரஸ் என்பன கிடைக்கப் பெறுகிறது. அது மட்டுமின்றி பன்னீரில் உள்ள சத்துக்கள் நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கும் உதவி புரிகின்றது.


02. உடலுக்குத் தேவையான புரோட்டீனை வழங்குகின்றது
பிறக்கவிருக்கும் குழந்தையின் திசுக்கள் மற்றும் சதை வளர்ச்சிக்கு புரோட்டீன் மிகவும் அவசியம். எனவே பன்னீரை தாய் உட்கொள்வதால் தேவையான புரோட்டீன்கள் குழந்தையை சென்றடைகின்றது.

03. தாய்க்கு தேவையான சக்தி கிடைக்கும்.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டல், சோர்வு மற்றும் இரத்த சோகை என்பவற்றை ஈடு செய்வதற்கு தேவையான சக்தி பன்னீரிலிருந்து பெறப்படும்.

04. பிறப்பு குறைபாடுகளை தவிர்க்க உதவுகிறது
பன்னீரில் அடங்கியுள்ள ஒமேகா 3, குழந்தைகளுக்கு பிறப்பு குறைபாடு ஏற்படாதவாறு பாதுகாக்கின்றது.


05. உடல் எடையைபே உதவும்
கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு ஏற்படும் பசியைப் போக்குவதோடு உடல் எடை அதிகளவில் கூடாதவாறும் அதே சமயம் குறையாதவாறும் காக்கிறது.

06. வீக்கம் மட்டும் மூட்டு வலியை குணமாக்கும்
கர்ப்ப காலத்தில் தாய்மாருக்கு ஏற்படக்கூடிய மூட்டுவலி மற்றும் வீக்கம் என்பவை தடுக்கப்படுகின்றது. பன்னீரில் அடங்கியுள்ள ஒவ்வாமையை எதிர்க்கக் கூடிய சக்தியே இதற்கு காரணம்.

இத்தகைய நல்ல பலன்கள் பலவற்றை தரக்கூடிய பன்னீரை கர்ப்பிணித் தாய்மார்கள் உட்கொள்வது சிறந்தது. எனினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல பன்னீரை அளவாக உட் கொள்ள வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!