திருவள்ளூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம்… பின்ணனியில் அதிர்ச்சித் தகவல்…!


திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரைப்பேட்டை அருகே உள்ள அய்யர்கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவரது மனைவி ஜெயந்தி (35).

இவர்களது மகள்கள் மகாலட்சுமி (16), மோனிஷா (15). இவர்களுடன் செல்வத்தின் தாய் வள்ளியம்மாளும் வசித்து வந்தார். செல்வம் இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

இந்நிலையில் மகாலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த உறவுக்கார வாலிபர் ஒருவரை காதலித்ததாகவும், இதனால் பிரச்சினை ஏற்பட்ட தாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மணம் உடைந்த குடும்பத்தினர் 5 பேரும், கடந்த மாதம் 27-ந் தேதி பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளனர்.

இதை அறிந்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதில் வள்ளியம்மாள், ஜெயந்தி, செல்வம், உள்பட 4 பேர் சிகிச்சை பலன் இன்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இப்படி ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவம் அய்யர்கண்டிகை கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. – Source : tamil.eenaduindia.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!