ஹோலி பண்டிகை கொண்டாடிய வாலிபருக்கு மர்மக் கும்பலால் நிகழ்ந்த அசம்பாவிதம்…!


ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடிய வாலிபர் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் நீரஜ் ஜாதவ் (வயது16). தலித் வாலிபரான இவர் நேற்று தனது நண்பர்களுடன் பிவாடி நகர் பகுதியில் ஹோலி பண்டிகை கொண்டாடினார்.

ஒருவருக்கொருவர் உடலில் வண்ணப் பொடி தூவி விளையாடினார்கள். அப்போது வேறு சிலர் கும்பலாக ஹோலி கொண்டாடினார்கள். இந்த கொண்டாட்டத்தின் போது நீரஜ் ஜாதவுக்கும் மற்றொரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் நீரஜ் ஜாதவை எதிர் தரப்பினர் சரமாரியாக தாக்கினார்கள். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று காயம் அடைந்த வரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். வாலிபர் நீரஜ் ஜாதவ் இறந்ததை அறிந்ததும் அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர். ஆஸ்பத்திரியை அடித்து உடைத்து சூறையாடினார்கள்.

அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் வாகனத்தையும் உடைத்து சேதப்படுத்தினார்கள். வாலிபர் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். – Source : maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!