30 வயதை கடந்தும் உங்க முகம் தங்கம் போல ஜொலிக்க இந்த அற்புதமான பொருள் மட்டும் போதும்..!


ஒருவருக்கு 30 வயது ஆகிவிட்டால் சருமம் தொடர்பான பிரச்சினைகள் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பிக்கும். அதை சரிவர கவனிக்கா விட்டால், இளவயதிலேயே முதுமைத் தோற்றம் தோன்றிவிடும்.

சருமம் பாதிப்படைந்து புதிய செல்கள் உருவாவது குறைந்து போவதாலேயே இந்த பிரச்சினை தோன்றுகின்றது. கொலாஜன் உற்பத்தி குறைவதால் தோலிற்கு அடியிலிருக்கும் கொழுப்பு படிவங்கள் கரைய ஆரம்பிக்கும்.

அதுவரை தோலிற்கு பிடிமானமாக இருந்த கொழுப்பு குறையும் போது, சருமம் தளர்வடைய ஆரம்பிக்கும். இதனால் தான் வயதான தோற்றம் ஏற்படுகிறது.

ஆகவே கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் நல்ல புரத உணவுகளும், சருமத்தை இறுகும் பயிற்சி மற்றும் இயற்கை மருத்துவ செய்முறைகளையும் செய்வதன் மூலம், சருமத்தை இளமையாக வைத்திருக்கலாம்.


இதற்கு முட்டையே சிறந்த தீர்வு என்றால் நம்புவீர்களா? ஆம், முட்டையை உபயோகித்து எவ்வாறு சருமத்தை பாதுகாப்பது எனப் பார்ப்போம்.

01. முட்டையின் வெள்ளைக்கருவுடன் 2 தேக்கரண்டி கடலைமாவு 1 தேக்கரண்டி எலுமிச்சைசாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடவும். காய்ந்ததும் கழுவுங்கள்.

02. முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதனுடன் மசித்த அவகாடோவின் சதைப்பகுதி மற்றும் 1 தேக்கரண்டி தயிர் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழிவினால் முகம் சுருக்கமின்றி அழகாய் இருக்கும்.


03. முட்டையின் வெள்ளைக்கருவுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவவும்.

04. முட்டையின் மஞ்சள் கருவை எடுத்து நன்றாக அடித்து அதனுடன் மசித்த வாழைப்பழம் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை கலந்து முகத்தில் போடவும். அரைமணி நேரம் கழித்து குளிரிந்த நீரில் கழுவவும். இதனால் சருமத்தில் புதிய செல்கள் உருவாகும். இது தளர்வடைந்த சருமத்தை இறுக்கி சுருக்கம் கருமை ஆகியவற்றை மறையச் செய்யும்.

05. கரட்டை துருவி சாற்றை எடுத்துக் கொள்ளுங்கள். 2 தேக்கரண்டி கரட் சாறுடன் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து முகத்தில் போடவும்.


06. முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானிமட்டியை கலந்து பேக்காக முகத்தில் போடவும். சருமம் நன்றாக இறுகியவுடன் கழுவுங்கள். – © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!