மருத்துவர்களை திகைக்க வைத்த பெண் – பித்தப்பையிலிருந்து எடுக்க எடுக்க கற்கள் வந்த விசித்திரம்..!


பெண்ணிற்கு செய்யப்பட்ட ஆபரேஷனில் பித்தப்பையில் இருந்து கற்களாக எடுக்கப்பட்டன.

கர்நாடக மாநிலம் தும்கூரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. கூலித் தொழிலாளியின் மனைவியான இவர், கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளார்.

உடனே தும்கூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது ராஜேஸ்வரியின் பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து இரண்டரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. ராஜேஸ்வரிக்கு ஹெர்னியா பிரச்சனை, பித்தப்பையில் கல், சர்க்கரை நோய், உடல் பருமன், இதயப் பிரச்சனை உள்ளிட்டவை இருந்துள்ளன.

இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்து, பித்தப்பையில் இருந்து 99 கற்களை மருத்துவர்கள் எடுத்தனர். அதில் 3 கற்கள் சுமார் 12 மிமீ அளவு பெரியதாக இருந்துள்ளது.

மேலும் குடல் வால் நீக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை மிகவும் சவால் நிறைந்து காணப்பட்டதாக மருத்துவர்கள் வாசிம் இம்ரான் கூறினார்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!