இனி வீட்டிலேயே இயற்கையாக கை, கால்களை அழகாக்கலாம்! எப்படி என தெரியுமா..?


இன்றைய உலகில் உள்ள இளம் யுவதிகளுக்கு கைகளை அழகாக்குவது என்றால் கொள்ளைப் பிரியம். அதனால் அடிக்கடி அழகு நிலையங்களுக்குச் செல்வதோடு மெனிக்யூரிலும் அதிகளவு அக்கறை செலுத்துகின்றனர்.

இந்த மெனிக்யூரை வீட்டிலிருந்தே செய்யலாம். அது எப்படி என்று கேட்கின்றீர்களா?

தேவையான பொருட்கள் :
சூரியகாந்தி எண்ணெய், ஒலிவ்எண்ணெய் – சமஅளவு
பாதாம் எண்ணெய் – 5 தேக்கரண்டி
விட்டமின்ஈ மற்றும் ஒலிவ்எண்ணெய் – சமஅளவு
விட்டமின்ஈ கெப்ஸ்யூல்
ரோஜா இதழ்கள்


செய்முறை:

முதலில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு விட்டமின்ஈ கெப்ஸ்யூலை உடைத்து அதிலுக்கும் எண்ணெயை கலவை எண்ணெயில் போடவும்.

இந்த கலவையை குறைந்த தீயில் அடுப்பை வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றுங்கள். பிறகு இந்த எண்ணெயில் ரோஜா இதழ்களை போடவும்.

சிலதுளி லவெண்டர் எண்ணெயை ஊற்றவும். இதில் உங்கள் கைகளை மூழ்க வையுங்கள்.


வெதுவெதுப்பான சூட்டில் உங்கள் கைகளுக்கு இதமாக இருப்பதுடன் இரத்த ஓட்டமும் சீராக அமையும்.

சூடு ஆறியது மறுபடியும் சூடுபடுத்தி கைகளை விடவும். 20 நிமிடங்கள் ஆனதும் கைகளை வெளியே எடுத்து கைகளில் உள்ள எண்ணெயை கை முழுவதும் மசாஜ் செய்யுங்கள். பின்னர் 10 நிமிடம் கழித்து கைகளை கடலை மாவு போட்டு கழுவவும்.

மாதம் ஒரு முறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த ஹொட்ஒயில் மெனிக்யூர் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!