நெஞ்சு வலியால் துடித்த வாலிபர்… பொது மக்களின் உதவிபெற செய்த தந்திரம் என்ன தெரியுமா?


சீனாவில் ரெயிலில் பயணம் செய்ய வந்தவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பொதுமக்களின் உதவி பெற பணத்தை வீசிய சம்பவம் நடந்துள்ளது.

சீனாவில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் பயணம் செய்ய ரெயில் நிலையம் வந்தார். பல மாதங்களுக்கு முன்பு இதயத்தில் ஆபரேசன் செய்து இருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் நெஞ்சு வலியால் துடித்த அவரால் பேக்கில் இருந்து அதற்குரிய மாத்திரையை வெளியே எடுக்க முடியவில்லை.


அதே நேரத்தில் உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத நிலையில் அவர் இருந்தார். இதற்கிடையே ரெயில் நிலையத்தில் வந்து செல்லும் மக்கள் மிகவும் பரபரப்பாக இருந்தனர்.

யாரும் அவரை கண்டு கொள்ளாமல் சென்று கொண்டிருந்தனர். எனவே தான் சிகிச்சை பெற பொது மக்கள் கவனத்தை தன்பக்கம் திருப்ப அவர் தான் வைத்திருந்த பணத்தை கட்டுக்கட்டாக வீசினார்.

பணத்தை பார்த்ததும் பரபரப்பான மக்கள் நெஞ்சு வலியால் துடித்து கொண்டிருந்த வாலிபரை நோக்கி தங்கள் கவனத்தை செலுத்தினர். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!