காதலிக்க மறுத்த மாணவிக்கு இளைஞர் செய்த கொடூரம்! மதுரை அருகே சம்பவம்..!


மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ராதேவி (வயது14). 9-ம் வகுப்பு மாணவியான இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது26) என்ற வாலிபர் கடந்த 16-ம் தேதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

தீயில் கருகிய மாணவி சித்ராதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த சித்ராதேவி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.


சித்ராதேவி மீது பெட்ரோல் ஊற்றி எரித்தது தொடர்பாக பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், சித்ராதேவி காதலிக்க மறுத்ததால் பாலமுருகன் இவ்வாறு செய்தது தெரியவந்துள்ளது.

மாணவி சித்ராதேவியை பாலமுருகன் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் சித்ராதேவி காதலை ஏற்க மறுத்ததுடன், தொடர்ந்து பின்தொடர்ந்து வந்த பாலமுருகன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பாலமுருகன் ஜாமீன் வந்ததும், பழிவாங்கும் வகையில் இந்த கொடூரத்தை செய்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!