53 வயது முதியவர் ஆடிய ஆட்டத்தால் 4 பேர் உயிரிழப்பு… நடந்தது என்ன?


சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் இன்று 53 வயது முதியவர் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில் 4 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் உயிரிழந்தனர்.

சீனாவில் சில பயங்கரவாதிகளும், விரக்தி அடையும் நபர்களும் அவ்வப்போது கத்திக்குத்து தாக்குதல்களில் ஈடுபட்டு பலரை கொன்று குவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜிக்ஸிங் நகரில் 53 வயது முதியவர் தனது வீட்டில் ஆடிய கொலைவெறி தாண்டவத்தில் 4 பேர் கத்திக்குத்து காயங்களால் உயிரிழந்தனர்.

கொலையாளியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த மாதத்தில் சீனாவில் நடந்த இரண்டாவது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 11-ம் தேதி சீனாவின் தலைநகரான பீஜிங் நகரில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 35 வயது நபர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தது நினைவிருக்கலாம். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!