ஸ்ரீதேவியின் மரணம் பற்றி அமிதாப் பச்சனுக்கு உள்ளுணர்வு உணர்த்தியதா..?


நடிகை ஸ்ரீதேவியின் மரணச் செய்தி வெளியாவதற்கு சில நிமிடங்கள் முன்பாக ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என நடிகர் அமிதாப் பச்சன் Tweet போட்டது தொடர்பாக இணையத்தில் ஏகப்பட்ட விவாதங்கள் நிகழ்ந்து வருகிறது.

ஸ்ரீதேவியின் மரணச் செய்தி வெளியாவதற்கு சில மணி நேரங்கள் முன்பாக, இந்திய நேரப்படி நள்ளிரவைக் கடந்த நேரத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நடிகர் அமிதாபச்சன், வழக்கத்திற்கு மாறாக மோசமாக உணர்வதாக பதிவிட்டிருந்தார். மேலும், ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Amitabh Bachchan

@SrBachchan
T 2625 – न जाने क्यूँ , एक अजीब सी घबराहट हो रही है !!


ஏதோ கெட்டது நடக்கப்போகிறது என்ற நடிகர் அமிதாப்பின் ட்விட் பதிவை பார்த்த திரையுலகினர் பலரும், அவருக்குதான் உடல் நலம் சரியில்லையோ என பதறிவிட்டனர். எனினும், அவர் நலமாக இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால், அடுத்த 20 நிமிடங்களில், நடிகை ஸ்ரீதேவி மரணமடைந்த செய்திக் கேட்டு, அனைவரும் மீளாத்துயரில் ஆழ்ந்துவிட்டனர்.

ஸ்ரீதேவியின் மரணத்தை அமிதாப் பச்சன் தனது உள்ளுணர்வால் உணர்ந்ததாலேயே மோசமாக உணர்ந்ததாக ஏராளமானோர் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர். இன்குலாப், ஆக்ரீ ராஸ்டா, குதா கவா ஆகிய படங்களிலும், இங்கிலிஸ் விங்கிலிஸ் என பல படங்களில் அமிதாப் பச்சனுடன் ஸ்ரீதேவி நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.-Source: ns7.tv

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!