விவாகரத்திற்கு பின்னர் அந்த ஒரு புகைப் படத்தால் சர்ச்சையில் சிக்கிய டிடி… படங்கள் உள்ளே…!


அண்மைக்காலமாக சர்ச்சையில் சிக்கியிருந்த பிரபல டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தற்போது அவரின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


தனது காதல் கணவருடனான விவாகரத்திற்கு பிறகு டிடியின் வாழ்க்கையில் மீண்டும் புத்துணர்ச்சி பூக்க துவங்கி உள்ளதாக அறிய முடிகின்றது.

கணவருடன் ஏற்பட்ட பிரிவிற்கு பிறகு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாத டிடி தற்போது முழு நேரம் படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளார். மேலும், வாழ்க்கையை ரசிக்கவும் துவங்கியுள்ளார்.

அவ்வப்போது காதல் பற்றி டீவீட் போடும் அவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோரை கட்டிபிடித்தபடி இருந்த புகைப்படத்தை ரசித்து பதிவு செய்தார்.


அதேபோல், தற்போது அவர் புதிய ஐபோன் எக்ஸ் வாங்கியுள்ளார். அதில் ஒரு செல்பி எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த போட்டோவில் அவரது கண் மிகவும் வித்யாசமாக உள்ளது இதனால் அவர் லென்ஸ் வைத்துள்ளாரா எனவும் கேள்விகள் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

என்னதான் விமர்சனம் சர்ச்சைகள் என்று அவரை தொடர்ந்து கொண்டிருந்தாலும் தனது அடுத்தக்கட்ட நகர்வுகளை வாழ்க்கையில் மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை, அண்மையில் காதலுக்கு எதிர்பான கருத்துக்களையும் வெளியிட்டும் சர்ச்சையில் சிக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. – Source : lankasee.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!