மாதவிடாய் வயிற்று வலியை உடனடியாக குணப்படுத்தும் இயற்கையான பானம்..!


மாதவிடாய் நாட்கள் என்றாலேயே பெண்கள் முகம் சுழிப்பதுண்டு. ஏனெனில் மாதவிடாய் நாட்களில் பெண்களைப் போட்டு வதைத்தெடுக்கும் வயிற்று வலி தான் இதற்குக் காரணம்.

இந்த வயிற்று வலி இல்லையேல் பெண்களைப் போல் சந்தோஷப்படுபவர்கள் வேறு யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலியைப் போக்க பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் வெந்தயத் தண்ணீரே சிறந்தது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இந்த வெந்தயத் தண்ணீரை வலி ஏற்படும் சமயத்தில் அருந்தும் பட்சத்தில் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

வலியைப் போக்கும் இந்த வெந்தயத் தண்ணீரை எவ்வாறு தயாரிப்பது எனப் பார்ப்போம்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் நான்கு கோப்பைத் தண்ணீரை ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதனை கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்து வரும் வேளையில் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை இடவும்.


பின்னர் பாத்திரத்தை மூடி 5 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். தண்ணீரின் நிறம் மஞ்சளாக மாறிய பின், அடுப்பில் இருந்து பாத்திரத்தை இறக்கவும். வெந்தயத் தண்ணீர் ஆறியதும், வெந்தயத்தை வடிகட்டி அகற்றி விட்டு தண்ணீரை மாத்திரம் போத்தல் ஒன்றில் வைத்துக் கொள்ளவும். இந்த வெந்தயத் தண்ணீரை வலி ஏற்படும் நேரங்களில் குடித்து வந்தால் வயிற்று வலி காணாமல் போய்விடும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!