ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு கூறிய அறிவுரை… என்ன தெரியுமா?


குடும்பத்தை கவனித்தபிறகு மக்கள் பணியில் ஈடுபடும்படி நடிகர் ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.

அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்குவதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ளார்.

ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் மற்றும் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்ட நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் காணொலி மூலம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரசிகர்களிடம் ஒழுக்கமும், கட்டுப்பாடும் இருந்தால்போதும். மற்றதை ஆண்டவன் பார்த்துக் கொள்வான். நமக்குள் ஏதேனும் சண்டை வருகிறதா என சிலர் பார்த்துக் கொண்டு உள்ளனர்.

குடும்பங்களை கவனித்த பிறகு மக்கள் பணியில் ஈடுபட வேண்டும் . உங்கள் எண்ணங்களை தூய்மையாக வைத்திருங்கள். இவ்வாறு அவர் கூறினார். – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!