முதியவரின் சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது – கேரளாவில் அதிர்ச்சி!

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தின் மரோட்டிச்சல் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் 76 வயது முதியவர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டைப்பையில் இருந்த செல்போன் திடீரென வெடித்து தீப்பிடித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் உடனடியாக எழுந்து அந்த செல்போனை எடுத்து கீழே போட்டார். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி தப்பினார். இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

இந்த பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பரவி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் ஒரே மாதத்தில் நடந்த 3-வது சம்பவம் இதுவாகும்.

முன்னதாக கடந்த மாதம் 24-ந்தேதி இதே திருச்சூர் மாவட்டத்தில் 8 வயது சிறுமி ஒருவர் செல்போன் வெடித்து உயிரிழந்தார். இதைப்போல கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவர் தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து காயமடைந்தார்.

இவ்வாறு அடுத்தடுத்து செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் நடைபெறுவதால் கேரளாவில் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!