வறண்ட சருமம் நீங்கி முகம் பளபளவென ஜொலிக்க வேண்டுமா..? ஆப்பிளுடன் இதை கலந்து பூசுங்க..!


எம்மில் பலருக்கு வறண்ட சருமம் காணப்படுவதுண்டு. அதனால் கையில் கிடைக்கும் அனைத்தையும் முகத்தில் பூசும் பழக்கம் உண்டு. சிலர் பல ஆயிரம் பணத்தை செலவு செய்து கிறீம்களை வாங்குவதுண்டு. இவை எல்லாமே முகத்தை பொலிவு பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகவே. வீட்டில் கிடைக்கும் ஆப்பிளைக் கொண்டு கூட இந்த பிரச்சினைக்கு எளிதில் தீர்வு காண முடியும்.


ஆப்பிள் பழத்தின் தோலை நீக்கி, அதனை நன்றாக மசித்து அதனுடன் சிறு துளி தேன் மற்றும் ஓட்ஸ் கலந்து அந்த கலவையை முகத்தில் பூசி சுமார் அரை மணி நேரம் வைத்திருந்து அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம், உங்கள் முகத்தில் வறண்ட சருமம் நீங்கி முகம் நன்கு பொலிவுடன் இருக்கும்.


அதே போல், தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்கு கொதிக்கவும். கொதிக்கும் போது அது தயிர் போன்று மாறும். பின்பு அதனை நன்றாக ஆறவிட்டு சிறிதளவை எடுத்து முகத்தில் பூசி அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும். அதன் பின்பு முகத்தை நன்றாக கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வருவதன் மூலம், முகத்தில் உள்ள வறண்ட சருமம் படிப்படியாக மாறி விடும்.


இந்த ஆப்பிள் முகத்திற்கு மட்டுமின்றி உடலுக்கும் பல்வேறு நன்மைகளை செய்கின்றது. அதனால் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடல் பொலிவுறுவதோடு நோயின்றி ஆரோக்கியமாக வாழவும் முடியும்.- © tamilvoicenews.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!