குழந்தைகளின் பெயர்களை அறிவித்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்!

நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியின், ட்வின்ஸ் மகன்களின் பெயர் என்ன என்பது குறித்த தகவல் தற்போது நயன்தாரா விருது விழாவில் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த வருடம் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றனர். திருமணமாகி சில மாதங்களிலேயே குழந்தை பெற்றது பெரிய சர்ச்சை ஆனது.

ஆனால் எங்களுக்கு 5 வருடத்திற்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்றுவிட்டது என அவர்கள் விளக்கம் அளித்தனர். குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு இருப்பதாக விக்னேஷ் சிவன் ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவில் கலந்துகொண்ட நயன்தாரா தனது மகன்களில் முழு பெயரை அறிவித்து இருக்கிறார். உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் அவர் அறிவித்து இருக்கிறார்.

குழந்தைகளின் பெயர்கள் வித்தியாசமாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் இணையத்தில் தெரிவித்து, தங்களது வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.

நடிகை நயன்தாரா தற்பொழுது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ‘ஜவான்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பிற்காக அவர் சமீபத்தில் மும்பை சென்ற பொழுது குழந்தைகளுடன் ஏர்போட்டில் இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!