20 மடங்கு பெரிய சூப்பர் மெகா நகரத்தை உருவாக்கும் சவுதி அரேபியா!

சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் மெகா நகரத்தை உருவாக்குவது ஆகும்.

சினிமா பாணியில் ஹாலோகிராபிக் தொழில்நுட்பத்தில் ஆச்சரிய நகரத்தை அமைக்கிறது சவுதி அரேபியா.சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டத்தின் படி எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய உட்புற சூப்பர் மெகா நகரத்தை உருவாக்குவது ஆகும்.

புதிய திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டு உள்ளது. அரபு மொழியில் கன சதுரம் என்று பொருள்படும் முகாப், 400 மீட்டர் உயரம், 400 மீட்டர் அகலம் மற்றும் 400 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும், இது உலகின் மிகப்பெரிய உட்புற நகரமாக இருக்கும்.

இது அதன் சொந்த உள் போக்குவரத்து அமைப்பைக் கொண்டிருக்கும். விமான நிலையத்திலிருந்து சுமார் 20 நிமிட பயணத்தில் இது இருக்கும். சவுதி விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத்தில் உலகின் மிகப்பெரிய நவீன நகரத்தை உருவாக்க சவுதி அரேபியா திட்டமிட்டு உள்ளது.இது ரியாத்தின் வடமேற்கில் கிங் சல்மான் மற்றும் கிங் காலித் சாலைகளின் சந்திப்பில் அமைய உள்ளது.

19 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்படும் இந்த புதிய நகரம் 104,000 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 9,000 ஓட்டல் அறைகள் ம மற்றும் பிற வசதிகளுடன் அமையும். புதிய முராப்பா டெவலப்மென்ட் நிறுவனம் இந்த திட்டத்தை உருவாக்கி, சமீபத்திய புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு முக்கிய அடையாளமான “முகாப்” ஐ உருவாக்கும்.

சவூதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம், முகாப் நகரம் 20 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களை உள்ளே வைத்திருக்கும் அளவுக்கு பெரியதாக இருக்கும்.

இந்த திட்டம் உள்ளூர் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கும், சவுதி பொருளாதாரத்திற்கான வருமான ஆதாரங்களை வகைப்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக அமையும்.

இது எண்ணெய் அல்லாத மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சவுதி ரியால் 180 பில்லியனை கொடுக்கும் மற்றும் 2030 க்குள் 334,000 நேரடி மற்றும் மறைமுக வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் 2030 இல் முடிக்கப்பட உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!