பெண் போலீசின் கன்னத்தில் மூதாட்டி அறைந்த வீடியோவால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் செக்கடிக்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியும், விவசாயம் செய்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக மேல்மலையனூர் தாசில்தார் அலெக்சாண்டர் தலைமையிலான வருவாய்த்துறையினர் அவலூர்பேட்டை போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அந்த கிராமத்துக்கு சென்றனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்தவர்களிடம் வீடுகளை காலி செய்யுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

அப்போது மணி மனைவி செந்தாமரை(வயது 65) என்ற மூதாட்டி திடீரென பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் அம்முவின் கன்னத்தில் 2 முறை அறைந்தார்.

இதை சற்றும் எதிர்பாராத அவர், பதிலுக்கு செந்தாமரையை தாக்கினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் போலீசின் கன்னத்தில் மூதாட்டி அறைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!