இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன்(வயது58) பணியாற்றி வந்தார்.

இவர் ரோந்துப்பணியில் நேற்று இரவு ஈடுபட்டிருந்தார். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரனுக்கு திடீரென இன்று அதிகாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

இதனால் உடன் இருந்து போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சப்-இன்ஸ்பெக்டராக மகேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!