குவிந்த பிரபலங்கள் – களைகட்டிய ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழா!

இந்தியளவில் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் என்பவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

அமெரிக்காவில் பிரவுன் பல்கலைக்கழகத்தில் படித்த ஆனந்த் அம்பானி தற்போது ரிலையன்ஸ் எரிசக்தி நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார்.

ராதிகா நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்தவர் தற்போது என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வீரேன் மெர்ச்சன்ட், ஷாலியா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள். கடந்த மாதம் 29ஆம் தேதி இத்திருமணத்தை உறுதிபடுத்தும் வகையில் ராஜஸ்தானில் ‘ரோக்கா’ எனும் விழா நடத்தப்பட்டது.

நேற்று முன்தினம் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகாவுக்கும் நடந்த சங்கீத் நிகழ்ச்சியில், ஆலியா பட் பாடலுக்கு ராதிகா நடனமாடும் வீடியோ வைரலானது. நேற்று இரவு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அல்டாமவுண்ட் சாலையில் நடந்த இந்த விழாவில் தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், இந்தி நடிகை, நடிகைகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தங்க நிற லெஹங்காவை அணிந்து கொண்ட தாரகை போல மின்னினார் ராதிகா. மணமகன் ஆனந்த் நீல நில ஆடையை அணிந்திருந்தார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் தனது மனைவியுடன் வந்து இந்த நிச்சயதார்த்த விழாவில் கலந்துகொண்டார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார்,இயக்குனர் கரண் ஜோகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பாலிவுட் நடிகர் சல்மான் கான், தனது சகோதரியின் மகளும், பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளவருமான அலிசே அக்னிகோத்ரியுடன் வந்து இருந்தார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூரும், குஷி கபூரும் ஒன்றாக வந்து ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டனர். பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தனது மகன் ஆர்யன் கானுடன் வந்து இருந்தார். நடிகை சையிப் அலிகானின் மகளும், இளம் பாலிவுட் நடிகையுமான சாரா அலிகான் வெள்ளை நிற உடையில் வந்திருந்தார்.

மேலும் ஜான் அபிரஹாம்,நடிகர் வருண் தவான் அவரது மனைவி நடாஷா தலால்,ஐஸ்வர்யா ராய் பச்சன் அவரது மகள் ஆராத்யா தயாரிப்பாளர் போனி கபூர், அவரது மகன் அர்ஜுன் கபூர்,நடிகை கத்ரீனா கைப், நடிகர் ரன்வீர் சிங்கும் அவரது மனைவியும் நடிகையுமான தீபிகா படுகோன்,நடிகை அனன்யா பாண்டே உள்ப்ட பலர் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் நடந்த சங்கீத் விழாவில் அதிக வேலைபாடுகளால் செய்யப்பட்ட எமரால்டு, தங்க நகைகளை ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்தார். அவரது லெஹங்கா ஆடை கண்களை கவரும் வகையில், மிரர் வேலைபாடுகளுடன் இருந்தது. பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா என்பவர் அதனை வடிவமைத்திருந்தார். ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் குஜராத்தி சடங்குகளின் படி நேற்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விழாவில் வளர்ப்பு நாய் மோதிரம் கொண்டு வந்து கொடுத்தது.

ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவிக்க , குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.அதனைத் தொடர்ந்து திருமண பத்திரிகை வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர்

திருமணத்திற்கு முன் நடைபெறும் இந்த விழாவை குஜராத்தில் கோல் தானா விழா என்கிறார்கள். கோல் என்றால் வெல்லம், தானா என்றால் கொத்தமல்லி விதைகள். இவை இரண்டையும் நிச்சயத்தார்த்த விழாவின் போது, மணமகன் வீட்டில் கொண்டு வருவர். மணமகளின் குடும்பத்தினர் மணமகன் வீட்டிற்கு பரிசுகள், இனிப்புகளுடன் வருவார்கள். நிச்சயம் ஆகப் போகும் ஜோடிகள் மோதிரங்களை மாற்றிய பிறகு, ஐந்து திருமணமான பெண்களிடம் ஆசி பெறுவார்கள்.

ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் காதல் கதை குறித்து போதிய தகவல்கள் இல்லை. இருவரும் பால்ய நண்பர்கள் என பல தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் 2018ஆம் ஆண்டு பகிர்ந்த புகைப்படம் அப்போது வைரலானது. அதுமட்டுமின்றி இந்த ஜோடி அம்பானி குடும்பத்தின் அனைத்து நிகழ்வுகளிலும், விழாக்களிலும் இணைந்து தான் கலந்து கொள்வர்.

இந்த நிகழ்ச்சியில், நிச்சயதார்த்தம் செய்யும் தம்பதிக்கு நீதா அம்பானி மிகப்பெரிய ஆச்சரியத்தை வைத்திருந்தார். யாரும் எதிர்பாராத வகையில், அம்பானி தனது குடும்பத்தினருடன் மேடையேறி மிக அழகாக நடனமாடி மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்லியது, மணமக்களையும், விருந்தினர்களையும் ஆனந்தக் கடலில் ஆழ்த்தியது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!