பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்… ரவீந்தர் கூறிய அதிரடி காரணம்.!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த சீசனில் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதில் பண மூட்டையுடன் கதிரவன் வெளியேறியதை தொடர்ந்து தற்போது பணப்பெட்டியுடன் மீதமுள்ள போட்டியாளர்களில் ஒருவர் வெளியேற வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் விக்ரமன், கதிரவன், மைனா நந்தினி, ஷிவின் மற்றும் அமுதவாணன் ஆகியோர் இருந்தனர். இவர்களில் அமுதவாணன் ஃபினாலே டிக்கெட்டை வென்று ஃபைனல்ஸ்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி முடிவடையும் நிலையில் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் பிக்பாஸில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் அண்மையில் நடந்தது. இது தொடர்பாக பண மூட்டையை கார்டன் ஏரியாவில் தொங்கவிட்ட பிக்பாஸ், போட்டியாளர்களிடம், அதிலிருக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு ஃபைனலிஸ்ட் 6 பேரில் யார் வேண்டுமானாலும் வெளியேறலாம். நேரம் ஆக, பணமூட்டையில் இருக்கும் பணமும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விஜே கதிரவன் பண மூட்டையை எடுத்துக்கொண்டு வெளியேறினார். பிக்பாஸில் முதன்முறையாக இரண்டாவது தடவையாக பணப் பெட்டி எடுக்கும் வாய்ப்பு போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஃபைனலிஸ்ட் போட்டியாளர்களில் யார் வேண்டுமானாலும் அதனை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஐந்து பேரில் ஒருவர் பணப்பெட்டியுடன் வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் குறித்து விமர்சனம் செய்து வரும் தயாரிப்பாளரும், அண்மையில் விஜே மகேஸ்வரியை திருமணம் செய்த ரவீந்தர் பேட்டி ஒன்றில் “தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வெற்றி பெற்றால் நியாயமாக இருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

அதில், “இப்போதைய இறுதி பட்டியலில் ஷிவின் வெற்றி பெற்றால் நியாயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். அவரிடம் குறைபாடு இருந்தாலும், பகை உணர்ச்சியை யாரிடமும் கக்கியதில்லை. அவருடைய உணர்ச்சியை நன்றாக கட்டுப்படுத்தி உள்ளார். விக்ரமன், அசீம் போல எந்த ஒரு பின்புலமும் ஷிவினுக்கு கிடையாது. தன்னுடைய திறமையை மட்டுமே ஷிவின் மூலதனமாக வைத்து இவ்வளவு தூரம் வந்துள்ளார்”. எனவே அவர் வெற்றி பெறலாம் என தெரிவிந்துள்ளர் ரவீந்தர் சந்திரசேகர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!