என் அமுதா ஒரு முழு கலைஞன்… உருகும் பிக்பாஸ் – கிண்டல் செய்த பார்வையாளர்கள்!

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் இன்றைய முதல் ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அமுதவாணன் பற்றி பிக் பாஸ் தெரிவித்த கருத்தை ஏற்க பார்வையாளர்கள் மறுக்கிறார்கள்.

பிக் பாஸ் 6 நிகழ்ச்சியின் முதல் ப்ரொமோ வீடியோவில் அமுதவாணனை காட்டியிருக்கிறார்கள். இந்த வீட்டில் நீங்கள் வாழ்ந்த நாட்கள், செஞ்ச டாஸ்க், இதோட நினைவுகளின் பொருட்கள் வைக்கப்பட்டிருக்கிறது என பிக் பாஸே சொல்வதுடன் ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து ஆஹா பொம்மை, பொம்மை இந்த வீடு ரெண்டா பிரிந்தது இந்த பொம்மையால் தான்டா என அமுதவாணன் சொல்ல அதை கேட்டு ஹவுஸ்மேட்ஸ் ஆமாம், ஆமாம் என்று சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ப்ரொமோ

பாராட்டு
உங்களை பொறுத்தவரைக்கும் வேண்டுமானால் நீங்கள் ஒரு காமெடியன் தானே என நினைத்திருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரைக்கும் என் அமுதா ஒரு முழு கலைஞன் என்றார் பிக் பாஸ். அதை கேட்ட அமுதவாணன் ஃபீல் செய்து நன்றி தெரிவித்தார். இதன் பின்னணியில் தனுஷின் மரியான் படத்திற்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பாடிய நெஞ்சே எழு பாடல் ஓடியது. அத்துடன் ப்ரொமோ வீடியோவை முடித்துக் கொண்டார்கள்.

தனுஷ்
ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, அமுதுவுக்கு நெஞ்சே எழு பாடல் எல்லாம் ரொம்ப ஓவர். கடவுளே, தனுஷும், ஏ.ஆர். ரஹ்மானும் இந்த ப்ரொமோ வீடியோவை பார்க்கவே கூடாது. பார்த்தால் நொந்து போய்விடுவார்கள் என கிண்டல் செய்துள்ளனர்.

கிளம்புகிறாரா?
பிக் பாஸ் பார்வையாளர்கள் மேலும் கூறியிருப்பதாவது, ஒரு வேளை பணப்பெட்டியை அமுது தான் எடுத்திருப்பாரோ என்கிற சந்தேகம் வருகிறது. போகும் போது அவர் சந்தோஷப்படட்டும் என பிக் பாஸ் இப்படி பாராட்டியிருப்பாரோ?. அமுதவாணன் எல்லாம் இவ்வளவு நாட்கள் இருந்ததே பெரிய விஷயம். அவரை காப்பாற்றியதே பிக் பாஸ் என தெரிவித்துள்ளனர்.

ஷிவின்
ஷிவின் ஆதரவாளர்கள் கூறியிருப்பதாவது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளில் இருந்து கடினமாக உழைப்பது ஷிவின் தான். அவருக்கு தான் டைட்டிலை கொடுக்க வேண்டும். ஒரு திருநங்கையை கவுரவிப்பாரா பிக் பாஸ்?. அவர் திருநங்கை என்பதற்காக டைட்டிலை கொடுக்கச் சொல்லவில்லை. அவர் கஷ்டப்பட்டு டாஸ்க் செய்ததற்காகத் தான் கேட்கிறோம் என்கிறார்கள்.

விக்ரமன்
அறம் வெல்லும் என்று சொல்லும் விக்ரமனுக்கு ஓட்டு போடச் சொல்லி திருமாவளவன் எம்.பி. தெரிவித்தது பலரையும் கோபம் அடைய செய்துள்ளது. திருமாவளவன் செய்தது தவறு என முன்னாள் போட்டியாளரான வனிதா விஜயகுமார் கூட சமூக வலைதளத்தில் தெரிவித்தார். அதை பார்த்தவர்களோ, நாங்களும் வனிதா அக்கா சொல்வதை தான் சொல்கிறோம் என்று கூறியுள்ளனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!