ரகசியமாய் ஷிவினுக்கு ரோஸ் கொடுத்த யோகி… கடுப்பான மைனா!

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த மைனா நந்தினியின் கணவர் ஷிவினுக்கு ரகசியமாக ரோஸ் கொடுத்து எப்போதும் நல்ல நண்பனாக இருப்பேன் என்று கூறியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஃபிரீஸ், ரிலீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருவது வழக்கம். இம்முறை டாஸ்க்கின் போது பார்வை தெரியாதப்படியான கண்ணாடியை அணிய சொல்லியிருக்கிறார் பிக்பாஸ். இதனால் ஃபிரீஸ் டாஸ்க்கின் போது உறவினர்கள் கண் எதிரே நின்றாலும் போட்டியாளர்களுக்கு தெரிவதில்லை.

ஷிவின் ஃபிரண்ட்ஸ்

அந்த வகையில் நேற்றைய டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்கு மைனா நந்தினியின் கணவர் யோகி, மகன் துருவ் மற்றும் மைனாவின் சகோதரர் ஆகியோர் வந்தனர். இதேபோல் அமுதவாணனின் மனைவியும் மூன்று மகன்களும் வந்தனர். ஷிவின் வீட்டில் இருந்து யாரும் வராததால் அவருடைய தோழியும் நண்பரும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தனர். அவர்களை கட்டியணைத்து கதறியழுதார் ஷிவின்.

மைனா நந்தினியின் கணவர்

அமுதவாணனின் மூத்த மகன் பிக்பாஸ் போட்டியாளர்களை போல் நடித்துக் காட்டி பட்டையை கிளப்பினார். அந்த வகையில் மைனா நந்தினியின் கணவர், அனைத்து போட்டியாளர்களிடம் சகஜமாகவும் ஃபிரண்ட்லியாகவும் பேசினார். தனது மனைவிக்கு எப்படி விளையாட வேண்டும் என்று அறிவுரை கூறினார். தொடர்ந்து தான் கொண்டு வந்த பேப்பர் ரோஸை ஷிவினுக்கு கொடுத்த மைனா நந்தினியின் கணவரான யோகி, வெளியில் எப்போதும் நல்ல நண்பனாக நான் இருப்பேன் என உறுதி கொடுத்தார்.

வெறுப்பேற்றிய ஷிவின்

இதனால் நெகிழ்ந்துப் போன ஷிவின், பல முறை நன்றி கூறினார். இதனை பார்த்த ஷிவினின் ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். ஆனால் ஷிவின் தனக்கு யோகி ரோஸ் கொடுத்தார் எனக் கூறி மைனா நந்தினியை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தார். ஆரம்பம் முதலே நேர்மையாக விளையாடி வரும் ஷிவின் பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசி வருகிறார். இதனால் ரசிகர்களின் ஆதரவு ஷிவினுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!