ஆசீர்வாதம் வாங்க காலில் விழுந்தப்போது கட்டிப்பிடித்தார்… பிரபல சீரியல் நடிகை பகீர்!

ஆசைக்கு இணங்காததால் பிரபல சீரியலில் இருந்து அதன் ரைட்டர் தன்னை நீக்கி விட்டதாக பிரபல நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய போது பிரபல சீரியல் ரைட்டர் தன்னை கட்டிப்பிடித்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் நடிகை மனீஷா பிரியதர்ஷி. மேலும் ஆசைக்கு இணங்காததால் பிரபல சீரியலில் இருந்து அதன் ரைட்டர் தன்னை நீக்கி விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

களவானி பட நடிகை

விமல் நடிப்பில் வெளியான களவானி படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் மனீஷா பிரியதர்ஷினி. குழந்தை நட்சத்திரமாக சில சீரியல்களில் நடித்த மனீஷா பிரியதர்ஷினி வளர்ந்த பிறகு சில சீரியல்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தார். அதன்பிறகு மனீஷா பிரியதர்ஷினியை சீரியல்களில் பார்க்க முடியாமல் போனது. இந்நிலையில் தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யாததால்தான் பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்ததாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

பாலியல் தொல்லை

இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர், தான் அகல்யா சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த போது அந்த சீரியலில் உதவி ரைட்டராக பணியாற்றியவர் என தெரிவித்துள்ளார். கல்யாண பரிசு சீரியல் வரும் போது அவர் முன்னணி ரைட்டராக இருந்தார் என்று தெரிவித்துள்ள மனீஷா பிரியதர்ஷினி, அவர்தான் தன்னை அந்த சீரியல் அறிமுகப்படுத்தியதாக கூறியுள்ளார்.

எனக்கு என்ன கொடுப்பீங்க

மேலும் தான் ஒரு முறை தனது அம்மாவுடன் அவரிடம் சான்ஸ் கேட்டு சென்றதாகவும், அப்போது நான் உங்களுக்கு சான்ஸ் வாங்கி கொடுத்தால் நீங்கள் எனக்கு என்ன கொடுப்பீர்கள் என கேட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதற்கு மனீஷா பிரியதர்ஷினியும் அவரது அம்மாவும் என்ன கேட்கிறீர்கள் என புரியவில்லை, எங்களுக்கு சீரியல் கமிட் பண்ணி கொடுத்தால், அதில் வரும் சம்பளத்தில் உங்களுக்கு வேண்டியதை தருகிறோம் என்று தெரிவித்தார்களாம்.

ஆனால் அதற்கு என்னிடம் பணமெல்லாம் நிறைய இருக்கிறது, பணம் பெரிதல்ல, நீங்கள் என்னிடம் அந்த மாதிரி அட்ஜெஸ்ட் பண்ணனும் என கூறினாராம். அதற்கு அப்படி ஒரு வாய்ப்பே எங்களுக்கு வேண்டாம். இதுவரை எப்படி வாய்ப்புகளை பெற்றோமோ அப்படியே பெற்றுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு வந்து கிளம்பியதாக தெரிவித்துள்ளார். தனக்கு சீரியலில் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் என ஒரு முறை அவரிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற போதும் அந்த ரைட்டர் மனீஷா பிரியதர்ஷினியிடம் தவறாக நடந்து கொண்டாராம்.

காலில் விழுந்தப்போது கட்டிப்பிடித்தார்…

அப்போது பழசை மறக்காத அந்த நபர், காலில் விழுந்த தன்னை தூக்கி கட்டிப்பிடித்து விட்டாராம். பிறகு அவரை பிடித்து கீழே தள்ளிவிட்டு ஓடி வந்துவிட்டாராம் மனீஷா பிரியதர்ஷினி. வேறு ஒரு சீரியலில் நடித்த போதும் ஆசைக்கு இணங்காததால் யாருக்கும் சந்தேகம் வராதப்படி தனது கேரக்டரை அவர் க்ளோஸ் செய்து விட்டார் என்றும் தெரிவித்துள்ளார் மனீஷா. சீரியல் ரைட்டர் தன்னை படுக்கைக்கு அழைத்தது குறித்து நடிகை மனீஷா பிரியதர்ஷினி இப்படி வெளிப்படையாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!