மகளின் திருமணத்தை பார்த்து விட்டு உயிரை விட்ட தாய்.!

பீகார் மாநிலத்தில் உள்ள பாலி என்ற கிராமத்தில் லாலன் குமார் என்பவர் வசித்து வருகிறார்.

இவருக்கு பூனம் வர்மா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு சாந்தினி குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக பூனம் வர்மா இதய நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. இதனால் அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் அவர் உயிரிழக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனை கேட்ட பூனம் வர்மா தனது கடைசி ஆசையாக மகளின் திருமணத்தை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்நிலையில் சாந்தினி குமாரிக்கும், ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கும் ஐசியுவிலேயே பூனம் வர்மாவின் கண்முன்னே திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 2 மணி நேரத்திலேயே பூனம் வர்மா உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!