உயிரோடதான் இருக்கேன்… கொல்லப்பட்டதாக கூறப்பட்ட டிவி நடிகை கொடுத்த ஷாக்!

தான் கொலை செய்யப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என டிவி நடிகை வீணா கபூர் தெரிவித்துள்ளார்.

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகை வீணா கபூர். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் 72 வயதான வீணா கபூர், கொலை செய்யப்பட்டதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.

மகனே கொன்றார்

சொத்துப் பிரச்சனையில் அவரது மகனே அவரை பேஸ் பால் பேட்டால் தலையில் அடித்து கொன்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை ஜூஹு பகுதி போலீசார் வீணா கபூர் அவரது மகன் மற்றும் வீட்டு வேலைக்காரரால் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். மேலும் வீணா கபூரின் மகன் மற்றும் வீட்டு பணியாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரோடுதான் இருக்கேன்

இந்நிலையில் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நடிகை வீணா கபூர், தான் உயிரோடுதான் இருக்கிறேன் என தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் வீணா கபூர் கொலை செய்யப்பட்டது உண்மைதான், ஆனால் அந்த வீணா கபூர் தான் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

தானும் தனது மகனுடன் வசித்து வருவதால் பலரும், அந்த வீணா கபூர்தான் தான் என நினைத்து போன் செய்து விசாரித்ததாகவும் கூறியுள்ளார். செய்தி நிறுவனங்களும் உண்மை என்ன என்று தெரியாமல், இந்த வதந்தியை பரப்பி விட்டார்கள் என்று தெரிவித்துள்ள வீணா கபூர் யாரும் இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.

நிம்மதி பெரு மூச்சு

இதுகுறித்து பேசியுள்ள வீணா கபூரின் மகனும் இந்த செய்தி தன்னை ரொம்பவே பாதித்துவிட்டதாகவும் பலரும் தன்னிடமும் இதுபற்றி விசாரித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் வீணா கபூர் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீஸில் புகார் அளித்துள்ளனர். கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட நடிகை வீணா கபூர் உயிரோடு வந்த தகவல் சினிமா பிரபலங்களை நிம்மதி பெருமூச்சு விட செய்துள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!