வீட்டில் ஏசி தீப்பிடித்ததில் நபருக்கு நடந்த பரிதாபம்!

சென்னை சூளைமேடு அருகே வீட்டில் மின்கசிவு காரணமாக ஏசி தீப்பிடித்ததால், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் என்பவர் தீயில் கருகி உயிரிழந்தார்.

அறையில் இருந்து புகை வருவதை பார்த்து தீயணைப்புத் துறையினருக்கு பொதுமக்கள் தெரிவித்ததை அடுத்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

தீ அணைக்கப்பட்ட நிலையில், அறையில் தூங்கி கொண்டிருந்த சுரேஷ் குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!