மகளின் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்ட சாயிஷா..!

நட்சத்திர தம்பதிகளான ஆர்யா சாயிஷாவின் மகள் ஆரியனாவின் போட்டோ இணையத்தை திணறடித்து வருகிறது.

நடிகர் ஆர்யா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து உள்ளம் கேட்குமே, கலாப காதலன், பட்டியல், வட்டாரம், நான் கடவுள், மதராசப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ் என்கிற பாஸ்கரன், அவன் இவர், வேட்டை, ராஜா ராணி, கஜினிகாந்த், மகாமுனி, காப்பான், டெடி சார்பட்டா பரம்பரை, அரண்மனை 3, எனிமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சாயிஷாவுடன் திருமணம்

கடைசியாக அவரது நடிப்பில் கேப்டன் படம் வெளியானது. காஃபி வித் காதல் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார் நடிகர் ஆர்யா. தற்போது காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கஜினிகாந்த் மற்றும் காப்பான் ஆகிய படங்களில் நடித்த போது அப்படங்களின் ஹீரோயினான சாயிஷாவுடன் நடிகர் ஆர்யாவுக்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

பெண் குழந்தை

இருவருக்கும் இடையிலான வயது வித்தியாசம் விமர்சனத்துக்குள்ளானது. இருப்பினும் ஆர்யாவும் சாயிஷாவும் தங்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் பெண் குழந்தை பிறந்தது.

தங்களின் குழந்தைக்கு ஆரியனா என பெயர் வைத்தனர். இந்நிலையில் தங்களின் குழந்தை முகத்தை முதல் முறையாக வெளி உலகிற்கு காட்டியுள்ளனர் ஆர்யாவும் சாயிஷாவும்.

அம்மாவை உரித்து வைத்திருக்கிறார்

ஆர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு தங்களின் மகள் புகைப்படத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளனர். நடிகை சாயிஷா எங்களின் குழந்தை ஆரியனா என்ற கேப்ஷனுடன் குடும்பத்துடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சாயிஷா ஷேர் செய்துள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், மூன்று பேருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆரியனா அப்படியே அவரது அம்மாவை உரித்து வைத்திருக்கிறார் என்றும், அமுல் பேபி போல் இருக்கிறார், க்யூட், பியூட்டிஃபுல் என்றும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!