அசீம் பற்றி உண்மைகளை புட்டு புட்டு வைத்த ஆயிஷா..!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள ஆயிஷா அசீமுடன் நடந்த சண்டைகள் குறித்து அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டில் மக்களுக்கு பிடித்த போட்டியாளரான ஜிபி முத்து தனது குடும்பத்தினர் நியாபகமாக இருப்பதாக கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு அவராகவே வெளியேறினார்.

அதன்பின்னர் மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி, செரீனா, ராபர்ட் மாஸ்டர் மற்றும் குயின்ஸி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளனர்.

கடந்த வாரம் டபிள் எவிக்சன் நடந்தது. இதில் நாமினேஷன் லிஸ்டில் அசீம், ஜனனி, கதிரவன், ஏடிகே, ஆயிஷா, ராம் ஆகிய 6 பேர் சிக்கினர். இவர்களில் முதலில் ராமும் அதனை தொடர்ந்து ஆயிஷாவும் வெளியேற்றப்பட்டனர்.

ஆனால் ஜனனியை விட ஆயிஷா நன்றாக விளையாடியதாகவும், இந்த எலிமினேஷன் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருப்பதாகவும் பிக்பாஸ் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்துள்ள ஆயிஷா யூடிப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார். அந்த வகையில் ஒரு பேட்டியில் அசீம் குறித்து பேசும் போது, ‘அசீம் அண்ணாக்கு பிக்பாஸ் அப்படின்னா என்னான்னு நல்லாவே தெரியும்.

எல்லாம் தெரிஞ்சவரு. கரெக்டா விளையாடிட்டு இருக்காரு. எனக்கும் அவருக்கும் நடந்த உரசல்கள் எல்லாமே அவரோட கேமுக்கு நடுவுல நம்மள யூஸ் பண்ற மாதிரி ஒரு கேம் வரும்.

ஆனால் கேம் முடியுறப்போதான் நமக்கே அது புரியும். அவரோட ஸ்டேட்டர்ஜிக்கு நம்மளை யூஸ் பண்ணிக்கிட்டாரு அப்படிங்கற மாதிரி ஒரு ஃபீல் வரும். இது பொதுவாகவே நடக்கும். முதல்ல நடக்கும் போது அப்படி இப்படின்னு போயிடுச்சு.

ஆனா அது தொடர்ந்து நடந்தப்பதான், அதை அவர்கிட்ட இருந்து அப்படியே அவாய்ட் பண்ண ஆரம்பிச்சேன். எனக்கும் அசீம் அண்ணாவுக்கும் முதல்ல சண்டை பெருசா வெடிச்சுருச்சு.. மாத்தி மாத்தி கத்தி அந்த சண்டை பெருசா போச்சு.

ஆனா அந்த டாஸ்க் முடிஞ்ச அடுத்த நிமிஷம், சாரிமா நாலு வருஷத்துல உன்ன இப்படி வாடி போடின்னு சொன்னதில்ல என அப்படியே நார்மலாக பேசும்போது, நானும் சரி பிரச்சனை இல்லைன்னு சொன்னேன்.

இவ்ளோ பேசிட்டு ஒருத்தரிடம் அடுத்த நிமிஷம் வந்து சாரி சொல்லும் போது, நமக்கும் புரியும்ல. ஓகே. இது உங்க ப்ளேயா இருந்துச்சு. அதுல என்னை இழுத்து விட்டீங்களா? அப்படின்னு தோணும்’.

“அந்த சண்டைக்கு அப்புறம் எங்களுக்குள்ள எல்லாமே நார்மல் ஆகிருச்சு. நான் நார்மல் ஆகிவிட்டேன். ஆனால் எனக்கு அப்படி அவர்கள் பேசிவிட்டால், மீண்டும் எனக்கு அவுங்களோட சகஜமா பேச வராது. அந்த பிரண்ட்ஷிப் கட் ஆகிடும். மறுபடியும் வராது.

அதுக்காக நான் மூஞ்ச காட்டிட்டு, மொறைச்சுகிட்டு, வஞ்சத்தை மனதில் வைத்துக்கொண்டு இருக்கும் நபர் கிடையாது”. இவ்வாறு அந்த பேட்டியில் அசீம் குறித்து பேசியுள்ளார் ஆயிஷா.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!