சான்ஸ் கேட்டப்ப நண்பனே அந்த மாதிரி பேச ஆரம்பிச்சுட்டான்… காஜல் வேதனை!

சான்ஸ் கேட்டதும் நண்பனே அந்த மாதிரி பேச ஆரம்பித்துவிட்டான் என நடிகை காஜல் பசுபதி தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சன் மியூஸிக் சேனலில் வீடியோ ஜாக்கியாக கெரியரை தொடங்கியவர் காஜல் பசுபதி. அதனை தொடர்ந்து சீரியல்களில் அறிமுகமானார் காஜல் பசுபதி. 2006ஆம் ஆண்டு வெளியனா டிஷ்யூம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம்ஸ், கள்வனின் காதலி, இதய திருடன், சிங்கம், கோ, மவுன குரு, கவுரவம், என்னமோ நடக்குது, இரும்பு குதிரை, அழகு குட்டி செல்லம், ஆயிரத்தில் இருவர் கலகலப்பு 2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திருமணம் விவாகரத்து

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் காஜல் பசுபதி. காஜல் பசுபதி, மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியின் கோரியோகிராஃபரான சாண்டி மாஸ்டருடன் காதல் மலர்ந்தது. இதையடுத்து காஜல் பசுபதியும் சாண்டி மாஸ்டரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அடுத்த சில ஆண்டுகளில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இதையடுத்து சிங்கிளாக குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாக அறிவித்தார் நடிகை காஜல் பசுபதி.

வாய்ப்பு கேட்டதால்

சாண்டி மாஸ்டரை விவாகரத்து செய்த பிறகும் கூட அவருடனும் அவரது குடும்பத்துடனும் நல்ல நட்பை கொண்டுள்ளார் காஜல் பசுபதி. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள காஜல் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் தைரியமாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் காஜல் பசுபதி, ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் வாய்ப்பு கேட்ட தன்னிடம் தனது நண்பர் பேசிய விதம் குறித்து வெளிப்படுத்தி வேதனைப் பட்டுள்ளார் காஜல் பசுபதி.

அசிங்கமாக பேசிய நண்பர்

அதாவது தனது நெருங்கிய தோழியின் காதலருக்கு ஒரு தொலைக்காட்சி சேனலின் தலைமை பொறுப்பில் இருப்பவருடன் நல்ல நட்பு உள்ளதால் அவரிடம் சீரியலில் நடிக்க ஏதாவது சான்ஸ் கிடைக்குமா என கேட்டு சொல்லுமாறு உதவி கேட்டுள்ளார் நடிகை காஜல்.

அதுவரை காஜலிடம் மரியாதையாக பேசிய அந்த நபர், சான்ஸ் கேட்டப் பிறகு நள்ளிரவில் போன் செய்து, தனக்கு இப்படி ஒரு பெண் வேண்டும் என சில அடையாளங்களை கூறி அசிங்கமாக பேசியுள்ளார்.

நண்பனே அப்படி பேசினான்

இதை ஏன் தன்னிடம் கேட்க வேண்டும் என்று யோசித்த காஜல், வாய்ப்பு கேட்டால் நண்பன் கூட இப்படிதான் பேசுவான் போல என நினைத்து அதன்பிறகு அந்த நபரிடம் பேசுவதையே நிறுத்தி விட்டாராம் காஜல் பசுபதி. அந்த சம்பவத்துக்கு பிறகு யாரிடமும் வாய்ப்பு கேட்க விரும்புவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வேண்டும் என்றால் சம்பளத்தில் சமரசம் செய்து கொள்ளலாம், வேறு எதிலும் அட்ஜெஸ்ட் செய்ய முடியாது என உறுதியாக தெரிவித்துள்ளார் நடிகை காஜல் பசுபதி.-News & image Credit: amil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!