ஜனனிக்கு சாதகமாக நடந்த அமுது – பொங்கியெழுந்த மைனா!

சொர்க்கவாசியான அமுதவாணனுக்கும், நரகவாசியான மைனா நந்தினிக்கும் இடையே இன்று சண்டை ஏற்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் 6 வீட்டில் இருக்கும் மைனா நந்தினியும், அமுதவாணனும் சண்டை போடும் ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளர்.

பிக் பாஸ்

இந்த வாரம் பிக் பாஸ் 6 போட்டியாளர்களை சொர்க்கவாசிகள், நரகவாசிகளாக மாற்றி டாஸ்க் கொடுத்திருக்கிறார்கள். நரகவாசிகள் சொர்க்கவாசிகளாக முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக அவர்கள் சில டாஸ்குகளை செய்ய வேண்டியிருக்கிறது. இது தொடர்பாக சொர்க்கவாசிகளுக்கும், நரகவாசிகளுக்கும் இடையே சண்டையாக இருக்கிறது. இந்நிலையில் தான் அப்படி ஒரு சண்டை தொடர்பான ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

மைனா

நேற்று வந்து எனக்கு செல்லோ டேப் ஒட்டும்போது தோளில் போட்டீங்க. மேலும் தொடையில் இருந்து கால் வரைக்கும் போட்டீங்க, கைக்கு போட்டீங்க. இப்போ ஏன் அதெல்லாம் போடவில்லை என்று அமுதவாணனிடம் கோபமாக கேட்டார் மைனா நந்தினி. தோள்பட்டையில் டேப் போடவில்லை, கைக்கு தான் போட்டேன் என்று அமுதவாணன் பதில் அளித்தார்.

அமுதவாணன்

இப்போ ஏன் அவருக்கு போடவில்லை என்று மைனா நந்தினி கேட்க, அவருக்கு அதுவே போதும் என்று விட்டுவிட்டேன் என்று கூலாக பதில் அளித்தார் அமுதவாணன். அதை எப்படி நீ முடிவு செய்வ என்று மைனா சீற, நான் முடிவு பண்ணுவேன் என அமுதவாணன் கூறினார். அதை கேட்டு மைனா நந்தினிக்கு மேலும் கோபம் வந்தது.

கெளம்பு

நான் முடிவு பண்ணுவேன் என அமுதவாணன் மீண்டும் கூற, தெரியுது, தெரியுது என மைனா பதில் அளிக்க அமுதுவுக்கு கோபம் வந்துவிட்டது. கை தட்டுவது, ஆக்ஷன் பண்ணுவது எல்லாம் வேண்டாம், நார்மலா பேசு என்றார் அமுதவாணன். கெளம்பு கெளம்புனு அமுதவாணனை விரட்டிவிட்டார் மைனா. பதிலுக்கு அவரோ நீ கெளம்பு என்றார். அத்துடன் ப்ரொமோ வீடியோ முடிந்துவிட்டது.

ஜனனி

அமுதவாணனும், ஜனனியும் நெருக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜனனிக்காக ஃபேவரிட்டிசம் பார்த்து தற்போது ஹவுஸ்மேட்ஸிடம் சிக்கியிருக்கிறார். அமுதவாணன் செய்வது தவறு என்று இதை தானே நேற்று அசீமும் கேட்டார். அவரை திட்டினாங்களே என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாகுபாடு

ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, ஜனனிக்கு ஃப்ரீ நாமினேஷன் கிடைக்க வழிவகை செய்கிறார் அமுதவாணன். இதை தான் நேற்று அசீம் சொன்னதற்கு விக்ரமனும், ஏடிகேவும் அமுதவாணனுக்கு சப்போர்ட் செய்தார்கள். அது தான் குரூப்பிஸம். தண்டனை என்று வரும்போது அனைவருக்கும் தான் டேப் போட வேண்டும். அதில் என்ன பாகுபாடு என கேள்வி எழுப்பியுள்ளனர்.

எரிச்சல்

நிகழ்ச்சி துவங்கி 70 நாட்கள் கழித்து 4 பேர் நாமினேஷன் ஃப்ரீ ஜோனுக்கு செல்வது எல்லாம் தேவையில்லாத ஆணி. அமுதவாணனை பார்க்கவே எரிச்சலாக இருக்கிறது. அவரை முதலில் வெளியே அனுப்புங்கள் என்கிறார்கள் பார்வையாளர்கள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!