பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் இரண்டு போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்து தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது இந்த ஆறாவது சீசன். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற போகும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் மெட்டி ஒலி சீரியல் நடிகை சாந்தி, அசல் கோலார், மகேஸ்வரி, நிவாஷினி, செரீனா மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் ஆகியுள்ளனர். மேலும் ஜிபி முத்து அவராகவே பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பினார். கடந்த வாரம் குயின்ஸி பிக்பாஸ் வீட்டை விட்டு எலிமினேட் ஆகியுள்ளார்.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஷிவின் கணேசன், அஸீம், ஆயிஷா, மணிகண்டன் ராஜேஷ், ரச்சிதா மகாலட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, விக்ரமன், அமுதவாணன், விஜே கதிரவன், மைனா நந்தினி மற்றும் தனலெட்சுமி ஆகிய போட்டியாளர்கள் உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களுக்கு மேல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வாரமும் குறைந்த வாக்குகள் அடிப்படையில் நாமினேஷன் பட்டியலில் உள்ள போட்டியாளர் வெளியேற்றப்படுகிறார்.

இந்நிலையில் பிக்பாஸில் இந்த சீசனில் முதன்முறையாக டபிள் எவிக்சன் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தமுறை இரண்டு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படவுள்ளனர்.

இந்த வாரம் ஆயிஷா, அசீம், ஜனனி கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றதால் அவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இந்த வாரம் ஒரு போட்டியாளர் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் வரும் வாரங்களில் பிக்பாஸ் வீடு மேலும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!