வாங்கிய கடனை திருப்பிக்கொடுத்த பிரபல நடிகை… உருகிப்போன பார்த்திபன்!

23 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை பிரபல நடிகை திருப்பிக் கொடுத்தது குறித்து உருகிப்போயுள்ளார் நடிகர் பார்த்திபன்.
உங்கள் குழந்தைகள் அறை, பள்ளி மற்றும் பொழுதுபோக்குகளுக்கு தேவையான அனைத்தும் கிட்ஸ் கார்னிவல் ஸ்டோரில் வாங்கலாம்
இரவின் நிழல்

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பல முகங்களுடன் வலம் வருபவர் பார்த்திபன். அவர் இயக்கி தயாரித்த ஒத்த செருப்பு திரைப்படம் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து அவர் இயக்கி தயாரித்த இரவின் நிழல் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான் லீனியர் படமான இரவின் நிழல் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆஸ்கருக்கு பரிந்துரை

ஆனால் இந்தியாவில் இருந்து ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும் படங்களில் மட்டுமே இப்படம் இடம் பெற்றது. அதோடு ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதல்வர் ஸ்டாலின் என பலரும் இப்படத்தை பார்த்து பாராட்டினர். இதனை தொடர்ந்து வெளியான பொன்னயின் செல்வன் படத்திலும் சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்தார் பார்த்திபன். தொடர்ந்து தனது வேலைகளில் பிஸியாக உள்ளார் பார்த்திபன்.

கடனை திருப்பிக் கொடுத்த நடிகை

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பார்த்திபன் அவ்வப்போது போஸ்ட்டுகளை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நடிகர் பார்த்திபன் ஷேர் செய்துள்ள பதிவு கவனத்தை பெற்று வருகிறது. அதாவது பிரபல நடிகையான மும்தாஜ் அவரிடம் 23 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய கடனை தற்போது திருப்பி கொடுத்துள்ளார்.

காலப்போக்கில் மறந்துவிட்டேன்

மேலும் தனது சமூக வ லைதள பக்கத்தில் தான் பிரபலமாக இல்லாத போது சரியான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி என குறிப்பிட்டுள்ள மும்தாஜ், பணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்ற எண்ணம் நல்லதாக இருந்தாலும், அதை செய்வதில் தவறிழைத்து, காலப்போக்கில் மறந்துவிட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பார்த்திபன் சார், இந்த சினிமாத் துறையில் நான் கண்ட மிகச் சில கண்ணியமான மனிதர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் இறைவன் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும் தர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்

மும்தாஜின் இந்த பதிவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ள நடிகர் பார்த்திபன் நெகிழ்ந்து போய் பதில் தெரிவித்துள்ளார். அவர் குறிப்பிட்டிருப்பதாவது, திருப்பித் தருவது-திருப்தி தருவது என்பதை உணர்த்தியவரின் இப்பதிவில் ‘நாளை’ என்பதன் தத்துவத்தை உணர்த்துகிறார். தொடர்ந்தால் யாவும் … ஒருவேளை முடிந்தால் சாவும் பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்பதை ஆழமாக சொல்கிறார். மனிதர்களை நேசிப்பதோடு வாசிக்கவும் செய்பவன் நான் என்பதால் எனக்கு தெரிவதை/தெளிவதை யாவருக்கும் சொல்ல விரும்புகிறேன்!

தினமும் முயற்சிக்கிறேன்

தினமும் ஒரு நல்ல காரியம் செய்ய முயற்சிக்கிறேன். இன்றும் செய்தேன். அதையெல்லாம் நான் வெளியில் சொல்வதில்லை. அவையாவும் என் அகத்தின் vacuum cleaner. பெருமையேத் தவிற, தற்பெருமையோ தம்பட்டமோ அல்ல. அப்படியிருக்க இதை வெளிபடுத்த காரணம் இதில் நான்/நாம் கற்றுக்கொள்ளும் மனித வாழ்வின் உன்னதமே!!! என கூறியுள்ளார். பார்த்திபனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் உங்களை நினைத்து பெருமையாக உள்ளது என பாராட்டி வருகின்றனர்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!