வான்பரப்பில் வெடித்து சிதறிய விமானம் : அனைத்து பயணிகளுக்கும் நடந்த பயங்கரம்..!


ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ வான்பரப்பில் பயணிகள் விமானமொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மொஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், பயணித்த 71 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இதில் பயணம் செய்த 71 பேரில் 65 பேர் பயணிகள் என்பதுடன் ஏனைய 6 பேர் விமான ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, விபத்து குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.-Source: tamilwin

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!