நெரிசலில் தந்தையை தவறவிட்ட சிறுவன்… பின் நிகழ்ந்த நெகிழ்ச்சி செயல்..!

அர்ஜென்டினாவில் நெரிசலில் தந்தையை தவறவிட்டுவிட்டு அழுதுகொண்டிருந்த சிறுவனுக்கு அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்த தந்தையின் பெயரையும் சிறுவனின் பெயரையும் கோஷமிட்டு மீண்டும் இருவரையும் சேர்த்த வீடியோ நெகிழ்ச்சி அடையவைத்துள்ளது.


அந்த சிறுவனின் தந்தை பெயரை தொடர்ந்து சத்தமாக கூறி ‘Eduardo வந்து உங்களின் Juan Cruz பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கோஷமிடுகிறார்.

அந்த சிறுவன் தந்தையை கண்டதும் வேகமாக ஓடி சென்று தந்தையை கட்டிபிடிக்கிறான்.


உலகில் பெற்றோர்கள் அனைவரும் எதாவது ஒரு நேரத்தில் அவர்களின் குழந்தையை காணாமல் தேடிக்கொண்டிருப்பார்கள். இது போன்ற ஒரு நிகழ்வு அர்ஜென்டினா நாட்டில் நடந்துள்ளது. அங்கு ஒரு கூட நெரிசலில் சிறுவன் ஒருவன் தந்தையை துளைத்துவிடுகிறான்.

தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ள அந்த சிறுவனை ஒரு பெரியவர் தனது தொழில் தூக்கி வைத்துக்கொண்டு அந்த சிறுவனின் தந்தை பெயரை தொடர்ந்து சத்தமாக கூறி ‘Eduardo வந்து உங்களின் Juan Cruz பெற்றுக்கொள்ளுங்கள்’ என்று கோஷமிடுகிறார்.

அவர் கோஷமிடுவதை பார்த்த அங்கு இருந்த பொதுமக்கள் அனைவரும் அவருடன் சேர்ந்து அதே போன்ற கோஷமாக கத்துகிறார்கள். இதுபோல தொடர்ந்து அவர்கள் கோஷமிடுவதை கேட்டு மகனை தேடிக்கொண்டிருந்த தந்தை அந்த இடத்திற்கு வந்த அந்த சிறுவனை கண்டுபிடிக்கிறார்.

அந்த சிறுவன் தந்தையை கண்டதும் வேகமாக ஓடி சென்று தந்தையை கட்டிபிடிக்கிறான். பின்னர் இருவரும் அங்கிருந்தவர்களுக்கு நன்றி கூறுகிறார்கள். இந்த வீடியோ தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு பகிரப்படுகிறது. தந்தை மகன் பாசத்தை கட்டுவது மட்டுமல்லாமல் இன்னும் மக்களின் மனிதாபிமானத்தை காட்டுவதாக இது உள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!