போர்க்களமான பிக்பாஸ் வீடு – மீண்டும் சுயரூபத்தை காட்டும் அசீம்…!

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டி பிபியை எகிற வைத்துள்ளார் அசீம்.

பிக்பாஸ் வீட்டில் இந்த வார வீக்லி டாஸ்க்காக ராஜவம்சமும் அருங்காட்சியகமும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ்மேட்ஸ் ராஜ குடும்பம், சேவகர்கள் உட்பட 3 குழுக்களாக உள்ளனர். இதனால் பிக்பாஸ் வீடே ராஜ அலங்காரத்தில் கலர்ஃபுல்லாக உள்ளது.

காரித்துப்பி…

இதில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டரும் ராணியாக ரச்சிதாவும் உள்ளது முதல் ப்ரமோவில் தெரிந்தது. இருவரும் பாகுபலி ரேஞ்சில் போஸ் கொடுத்தனர். இதனை தொடர்ந்து இரண்டாவது ப்ரமோ வெளியானது. இதில் அசீம், காரித்துப்பி தருகிறேன் அதை சாப்பிடுங்கள் என விக்ரமனிடம் மல்லுக் கட்டினார்.

கடும் வாக்குவாதம்

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மீண்டும் எல்லை மீறி பேசினார் அசீம். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரமோவும் அசீம் மற்றும் விக்ரமனை மைய்யப்படுத்தி வந்துள்ளது.

வெளியே போய் பேசுய்யா

இதில் பேசும் அசீம், நீ பேசுறதுன்னா வெளியே போய் பேசுய்யா போ.. என்று விக்ரமனிடம் மரியாதை குறைவாக பேசுகிறார். அதற்கு பதிலளிக்கும் விக்ரமன், என்னை வெளியே போய் பேச சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை என்கிறார். இதனைக் கேட்டு சூடாகும் உங்களுக்கு எல்லா அருகதையும் இருக்கா என எகிறுகிறார்.

மீண்டும் சுயரூபம்

தொடர்ந்து ஷிவினிடமும் மல்லுக்கு நிற்கிறார் அசீம். எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் கலகம் செய்வது அசீம்மின் வாடிக்கையாக உள்ளது. கமல் ரெட் கார்டு வரை சென்று கண்டித்ததால் கடந்த வாரம் கொஞ்சம் அடக்கி வாசித்தார் அசீம். இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் தனது சுயரூபத்தை காட்டியுள்ளார்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!