ஆராத்யாவுக்கு பிறந்தநாள்… புகைப்படம் வெளியிட்ட ஐஸ்வர்யா ராயை விளாசிய ரசிகர்கள்

ஐஸ்வர்யா ராய் பச்சன் தன் செல்ல மகள் ஆராத்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் விளாசுகிறார்கள்.


பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்யா ராயின் செல்ல மகள் ஆராத்யா பச்சன் இன்று தன் 11வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த காரணத்தால் #Aaradhyabachchan என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

ஐஸ்வர்யா தன் மகளுக்கு அன்பு முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த சமூக வலைதளவாசிகள் ஐஸ்வர்யா ராயை விளாசுகிறார்கள். அவர்கள் கூறியிருப்பதாவது,

அதென்ன மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது?. இந்த பழக்கத்தை நிறுத்தவே மாட்டீர்களா?. ஆராத்யா பிறந்ததில் இருந்து இன்றுவரை ஒரே ஹேர்ஸ்டைல். அவர் வளர்ந்துவிட்டார் என்பதை உணர்ந்து அதை மாற்றுங்கள்.

மேலும் வெளியே செல்லும்போது ஆராத்யாவின் கையை பிடித்துக் கொள்வதை நிறுத்திங்கள் ஐஸ்வர்யா என தெரிவித்துள்ளனர்.

ஐஸ்வர்யா ராயின் ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

ஆராத்யா அவர் மகள். ஆராத்யாவின் உதட்டில் ஐஸ்வர்யா முத்தம் கொடுத்தால் உங்களுக்கு என்ன வந்தது?. அம்மாவை விட மகளை பற்றி உங்களுக்கு தெரியுமோ?. போய் வேலையை பாருங்கள் என கூறுகிறார்கள்.

தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டால் ஹேட்டர்ஸ் விளாசுவார்கள் என்பது ஐஸ்வர்யாவுக்கு தெரியும். ஆனால் அதை அவர் கண்டுகொள்வதாக இல்லை.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!