மதுகுடித்து சிக்கன் ரைஸ் சாப்பிட்ட வாலிபர் திடீர் மரணம்!

வியாசர்பாடி, எஸ்.ஏ. காலணி 8-வது தெருவை சேர்ந்தவர் மகாவிஷ்ணு (வயது21). நேற்று இரவு அவர் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

பின்னர் அவர்கள் மது குடித்துவிட்டு ‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்டதாக தெரிகிறது. பின்னர் மகாவிஷ்ணு இரவில் வீட்டுக்கு வந்து தூங்கினார். நள்ளிரவு 12 மணியளவில் மகாவிஷ்ணுவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தனர்.

அங்கு உடல்நிலை மேலும் மோசம் அடைந்ததால் மகாவிஷ்ணுவை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மகாவிஷ்ணு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மகாவிஷ்ணுவின் சாவுக்கு காரணம் என்ன என்று தெரியவில்லை. மது குடித்துவிட்டு அளவுக்கு அதிகமாக ‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்டதால் அவர் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று எம்.கே.பி.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் விசாரணை நடத்தி வருகிறார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!